• முகப்பு
  • குற்றம்
  • திருச்சி விமான நிலையத்தில் 78 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 2 பயணிகளிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் 78 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 2 பயணிகளிடம் விசாரணை

JK

UPDATED: Jul 13, 2024, 10:18:05 AM

திருச்சி விமான நிலையம்

சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகள் மற்றும் ஆவணங்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட இரண்டு ஆண் பயணிகளை தனியே சென்று சோதனை மேற்கொண்ட போது ஒருவர் தனது பேண்டில் மறைத்து வைத்திருந்த 360கிராம் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர். 

Latest Trichy District News

இவற்றின் மதிப்பு ரூபாய் 27,02,520அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மற்றொரு ஆண் பயணியை சோதனை மேற்கொண்ட போது அவர் 682கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றின் மதிப்பு 51,19,774 ரூபாய். ஒரே விமானத்தில் பயணம் செய்த இருவரிடம் ரூபாய் 78,22,294 மதிப்புள்ள 1042 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended