• முகப்பு
  • குற்றம்
  • மும்பையில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து போதை மாத்திரைகளாக விற்பனை செய்த 6 பேர்

மும்பையில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து போதை மாத்திரைகளாக விற்பனை செய்த 6 பேர்

சுந்தர்

UPDATED: Jul 1, 2024, 6:56:07 PM

கோயம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வருவதாக வந்த தகவலையடுத்து கோயம்பேடு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் ரயில் மூலம் மும்பைக்கு சென்று அங்கிருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து கோயம்பேடு, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்தது உறுதியானதையடுத்து மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்த ஆழ்வார் திருநகரை சேர்ந்த மாணிக்கம்(21), மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரை அரக்கோணம் ரயில் நிலையத்தில் வைத்து கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 3000 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்த நிலையில் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் கோயம்பேடு பகுதிகளில் மாணவர்களை குறி வைத்து வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது

மேலும் போதை மாத்திரைகளை வாங்கி வருவதற்காக அதே பகுதியை சேர்ந்த அரிஷ்(35), விஜயகுமார்(என்ற) கிழிந்த வாய்(22), அஜய்(22), கோகுல்(21), உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். இவர்கள் செல்போனில் குழு அமைத்து அதில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து கோயம்பேடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதை மாத்திரைகளுக்காக மும்பைக்கு சுற்றுலா செல்வது போல் பணம் செலவழித்து சென்று போதை மாத்திரைகளை

வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளதாகவும் மேலும் இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended