நண்பர்களை பீர்பாட்டில், கத்தியால் தாக்கிய 4 நண்பர்கள்.

S.முருகன்

UPDATED: Sep 15, 2024, 6:31:06 PM

குன்றத்தூர்

நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(24), இவரது நண்பர்கள் சாகுல்(22), ஜெகா(என்ற) ஜெகதீஷ்(21), ஜெகன்(26), ஆகிய நான்கு பேரும் நேற்று இரவு நந்தம்பாக்கம் பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். 

அப்போது வேலை முடித்துவிட்டு அவர்களது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த விஜய்(24), செல்வக்குமார்(24), ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

குற்றம் நியூஸ் அப்டேட்ஸ்

அப்போது இருவரையும் மது அருந்த நான்கு பேரும் அழைத்தனர் விஜய் மற்றும் செல்வகுமார் ஏற்கனவே மது போதையில் இருந்ததால் மது அருந்த வரவில்லை என்று கூறியுள்ளனர். 

மது அருந்த தாங்கள் அழைத்து வராததால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் சேர்ந்து இருவரையும் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.

Latest Crime News In Tamil

Breaking News In Tamil 

இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் போதையில் இருந்தவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர் பின்னர் போதை தெளிந்து தங்களை தாக்கிய நண்பர்களை தேடி வீட்டிற்கு சென்றபோது அவர்கள் இல்லாததால் மது அருந்திய இடத்திற்கு வந்துள்ளனர். 

தங்களை தேடி விஜய் மற்றும் செல்வம் வீட்டிற்கு வந்ததை அறிந்ததும் நான்கு பேரும் சேர்ந்து மது அருந்திய இடத்திற்கு சென்று விஜய் மற்றும் செல்வத்தை பீர் பாட்டில் மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்

இதில் விஜய் மற்றும் செல்வத்திற்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்

Chennai District News In Tamil 

பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் 

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் மகேஷ், சாகுல், ஜகா என்ற ஜெகதீஷ், ஜெகன் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

மது அருந்த நண்பர்கள் அழைத்த போது வராத பாத்திரத்தில் சக நண்பர்களே கத்தி மற்றும் பீர்பாட்டினால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended