![](assets/tgi-logo2.jpg)
புவனகிரி அருகே திருட முயன்று 5 பேர் சிக்கிய விவகாரத்தில் பிடிபட்டவர்களிடமிருந்து 30 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
![புவனகிரி அருகே திருட முயன்று 5 பேர் சிக்கிய விவகாரத்தில் பிடிபட்டவர்களிடமிருந்து 30 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்](https://api.thegreatindianews.com/uploads/original/theft-thieves.jpg)
![](assets/avatar-profile-icon.webp)
சண்முகம்
UPDATED: Jul 1, 2024, 4:50:14 AM
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீழ மணக்குடி கிராமத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளையடிக்க முயன்றவர்களை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், திருச்சியைச் சேர்ந்த மதியழகன், கம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சுரேஷ் மற்றும் அன்பழகன் ஆகியோர் என்பது தெரிய வந்தது.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு புவனகிரியை அடுத்த கீரப்பாளையம் பகுதியில் வீடு புகுந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்ததை செய்தவர்கள் இவர்கள் என்பதும்,
மேலும் சிதம்பரம், அண்ணாமலைநகர், லால்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் கைவரிசை காட்டியதையும், இவர்கள் மீது ஏற்கெனவே பல திருட்டு வழக்குகள் இருந்ததையும் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 30 பவுன் தங்க நகை, 3 கிலோ வெள்ளி பெருள்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.