ராணிப்பேட்டை அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பரணி

UPDATED: Sep 14, 2024, 6:52:26 PM

ராணிப்பேட்டை மாவட்டம்

அம்மூரில் இருந்து ஆந்திரா சித்தூர் பகுதிகளுக்கு ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் செந்தில் முருகன் தலைமையில் போலீசார் முத்துக்கடை பகுதியில் பணியில் ஈடுபட்டனர்

அப்போது அந்த வழியாக அரிசி லோடு ஏற்றி வந்த மினி வேன் போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்றது அதனை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் மடக்கி பிடித்து வேனில் சோதனை மேற்கொண்டனர் 

ரேஷன் அரிசி கடத்தல்

சோதனையில் சுமார் மூன்று டன் ரேஷன் அரிசிகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது இதனை அடுத்து உடனடியாக 3 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தி வரப்பட்ட வேனை பறிமுதல் செய்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாலாஜி வயது 38 ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி வயது 40 ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்

 

VIDEOS

Recommended