• முகப்பு
  • சினிமா
  • சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு பொன்னேரி அருகே, பிரபுதேவா முன்னிலையில் நடன கலைஞர்கள் நடனமாடி சாதனை.

சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு பொன்னேரி அருகே, பிரபுதேவா முன்னிலையில் நடன கலைஞர்கள் நடனமாடி சாதனை.

L.குமார்

UPDATED: Jul 29, 2024, 6:51:19 PM

சென்னை

சென்னையில் கடந்த மே மாதம் நடைபெறவிருந்த நடன சாதனை நிகழ்ச்சியில் நடிகர் பிரபுதேவா பங்கேற்காத நிலையில், பொன்னேரி அருகே அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மீண்டும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் சுமார் ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்று, 100 நிமிடங்களில் 100 பாடல்களுக்கு நடனமாடி உலக சாதனை படைத்தனர்.

நடிகர் பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை கண்டுரசித்தார்.

நீண்ட நேரமாக மேடையில் அமராமல் நின்று கொண்டே நடனத்தை ரசித்த பிரபுதேவா, ரசிகர்களின் அன்பால் உணர்ச்சிவசப் படுவதாக நெகிழ்ச்சியுடன் பேசினார்.

உலக சாதனை

தொடர்ந்து உலக சாதனை நிகழ்த்தியதற்கான அங்கீகாரமாக ஒரு குழுவினருக்கு பிரபுதேவா சான்றிதழை வழங்கிவிட்டு புறப்பட்டார்.

கடைசிவரை பிரபுதேவா நடனம் ஆடாமல் சென்றதால் நடன கலைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

VIDEOS

Recommended