• முகப்பு
  • சினிமா
  • பாலியல் தொல்லை தரும் நடிகர்களுக்கு தண்டனை நடிகை ஊர்வசி வற்புறுத்தல்.

பாலியல் தொல்லை தரும் நடிகர்களுக்கு தண்டனை நடிகை ஊர்வசி வற்புறுத்தல்.

கார்மேகம்

UPDATED: Oct 12, 2024, 10:47:40 AM

சென்னை

மலையாள சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் கொடுமைகள் நடந்துள்ளதாக ஹேமா கமிஷன் அளித்துள்ள அறிக்கை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்த நிலையில் தமிழ் மலையாள பட உலகில் பிரபல நடிகையாக இருக்கும் ஊர்வசி அளித்துள்ள பேட்டியில்

பாலியல் தொல்லை

ஹேமா கமிஷன் குற்றச்சாட்டு சாதாரணமானது அல்ல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மற்றும் அதற்கு உதவியாக இருந்தவர்கள் மீது மலையாள நடிகர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 

ஹேமா கமிஷன்

நடிகர்கள் இயக்குனர்கள் என்று பலர் மீது நடிகைகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் கூறி வருகிறார்கள் தவறு செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும் என்னைப் போன்று பலருக்கு சினிமாதான்  வாழ்வாதாரமாக இருக்கிறது

இப்படி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள ஆண்களுக்கு மத்தியில் இவ்வளவு காலம் வேலை செய்து  இருக்கிறோம் என்று நினைக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது

நடிகை ஊர்வசி 

ஆண்களும் பெண்களும் கண்ணியமாக வேலை செய்தால்தான் நல்ல படங்களை கொடுக்க முடியும் எனவே மோசமான செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டியது அவசியம் நடிகர் சங்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் தவறு செய்தவர்களை சங்கத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றார். 

 

VIDEOS

Recommended