• முகப்பு
  • சினிமா
  • அறையில் 3 பெண்களுடன் பிரபல நடிகர் மீது நடிகை பாலியல் புகார்.

அறையில் 3 பெண்களுடன் பிரபல நடிகர் மீது நடிகை பாலியல் புகார்.

கார்மேகம்

UPDATED: Oct 1, 2024, 10:26:25 AM

சென்னை

ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்தி உள்ள நிலையில் நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பகிர்ந்து வருகிறார்கள்

அந்த வகையில் நடிகை மினுமுனிர் ஏற்கனவே மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா முகேஷ் மணியன் பிள்ளை ராஜு உள்ளிட்டோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்து இருந்தார் தற்போது பிரபல நடிகரும் இயக்குனருமான பாலச்சந்திரமேனன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளார் 

இது குறித்து மினுமுனிர் கூறும்போது நடிகர் பாலச்சந்திர மேனன் ஒரு அறையில் மூன்று இளம் பெண்களுடன் கூட்டு பாலியலில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார் அதை சுற்றி இருந்து மூன்று ஆண்கள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் 

அப்போது அந்த அறைக்கு நான் சென்றுவிட்டேன் என்னையும் அங்கு உட்கார்ந்து அந்த ஆபாசத்தை பார்க்கும் படி வற்புறுத்தினார் அதற்கு நான் உடன்படாமல் அறையை விட்டு வெளியே வந்து விட்டேன்

இன்னொரு முறை ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைகளை எதிர் கொண்டேன் அந்த வன்கொடுமையை தாங்க முடியாமல் விரக்தியில் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியுள்ளார் இந்த குற்றச்சாட்டு பரபரப்பாகி உள்ளது.

 

VIDEOS

Recommended