• முகப்பு
  • சென்னை
  • குடும்ப பிரச்சனையில் 3 வயது மகனை போரூர் ஏரியில் வீசிவிட்டு சென்ற கொடூர தந்தை

குடும்ப பிரச்சனையில் 3 வயது மகனை போரூர் ஏரியில் வீசிவிட்டு சென்ற கொடூர தந்தை

சுந்தர்

UPDATED: Jun 3, 2024, 7:35:00 PM

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள சாலையில் மோட்டார் சைக்கிளில் சிறுவனுடன் வந்து நின்ற நபர் ஒருவர் திடீரென மோட்டார் சைக்கிள் முன்பு அமர வைத்திருந்த சிறுவனை தூக்கி போரூர் ஏரியில் தண்ணீரில் வீசிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டார்.

இதனை அங்கு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர்கள் பார்த்துவிட்டு உடனடியாக ஏரியில் வீசப்பட்ட சிறுவனை நீரில் நீந்தி சென்று உயிருடன் மீட்டனர். இதில் மிகவும் பதற்றத்துடன் இருந்த அந்த சிறுவனை மீட்டு போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில் ஏரியில் குழந்தையை வீசிவிட்டு சென்றது தலைமை செயலக காலணியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை வீட்டில் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தனது மகன் 3 வயது மகன் தர்சனை தூக்கி வந்து கோபத்தில் போரூர் ஏரியில் தூக்கி வீசிவிட்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றது தெரியவந்தது

மேலும் இது சம்பந்தமாக அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவுன் அதன் பேரில் அயனாவரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது தற்போது அயனாவரம் போலீசார் மீட்கப்பட்ட சிறுவனை அழைத்து செல்ல வந்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக பெற்ற மகனை ஏரியில் வீசிவிட்டு சென்ற கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended