• முகப்பு
  • சென்னை
  • உணவு அருந்திய போது குற்ற பிரிவு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.

உணவு அருந்திய போது குற்ற பிரிவு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.

நெல்சன் கென்னடி

UPDATED: Aug 13, 2024, 10:02:14 AM

சென்னை

ஆவடி அருகே திருமுல்லைவாயில் நாகம்மை நகரை சேர்ந்தவர் சரவணன்/51 இவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்து வீடு திரும்பிய சரவணன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு சரிந்தார்.

உடனடியாக குடும்பத்தார் அவரை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Latest Chennai District News

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சரவணன் நெஞ்சுவலி ஏற்பட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் சக போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உடலுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றி வரும் அவரது நண்பர்கள், சக போலீசார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

VIDEOS

Recommended