• முகப்பு
  • வானிலை
  • வங்கக்கடலில் உருவாகிறது டானா புயல்  வானிலை ஆய்வு மையம் தகவல்.

வங்கக்கடலில் உருவாகிறது டானா புயல்  வானிலை ஆய்வு மையம் தகவல்.

கார்மேகம்

UPDATED: Oct 21, 2024, 11:08:18 AM

சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்த புயலுக்கு டானா என பெயரிடப்பட்டு இருக்கிறது.

( தமிழ்நாட்டில் மழை)

தமிழ்நாட்டில் கடந்த 15- ந்தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது அதன்படி தமிழ்நாட்டில்  கடந்த 15- ந்தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்தது

அந்த நேரத்தில் வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும் வட மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சியும் நிலவியதால் இந்த மழை பெய்தது மேலும்  தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே வரும் போது மேலும் மழை இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது பொய்த்து போனது.

டானா புயல்

( வங்கக்கடலில் புயல்)

இதன் தொடர்ச்சியாக மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று திங்கட்கிழமை ) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது

இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ( செவ்வாய் கிழமை ) தாழ்வு மண்டலமாகவும் நாளை மறுதினம் ( புதன் கிழமை புயலாகவும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வலுவடைய உள்ளது எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்த புயலுக்கு டானா என்று  பெயரிடப்பட்டு இருக்கிறது இந்த புயலினால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்பதே தற்போது வரையிலான தகவலாக இருக்கிறது.

ஒடிசா - வங்காள தேசம் 

( எங்கு கரையை கடக்கிறது )

வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல்  தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா - வங்காள தேசம் இடையே மேற்கு வங்காளத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது

இதனால் ஒடிசா மேற்கு வங்காளம் மாநிலங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஆனால் அரபிக்கடலில் ஒரு காற்று சுழற்சி நிலவுவதால் மேற்கு மேற்கு காற்று தமிழ்நாட்டு பக்கம் வீசுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும்

இதனால் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்

இது வடகிழக்கு பருவமழை காலத்தில் அரிதாக நிகழக்கூடிய நிகழ்வாக  பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Vaanilai Arikai

( இன்றும் நாளையும்)

இதற்கிடையில் இன்றும் நாளையும் வட  தமிழக கடலோரப் பகுதிகளையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

 

VIDEOS

Recommended