மாவனல்லை பதுரியாவில் சின்னம் சூட்டும் நிகழ்வு
பாரா தாஹீர்
UPDATED: Oct 21, 2024, 2:16:26 AM
மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் நடப்பாண்டுக்கான மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம் பெற்றது.
கல்லூரி அதிபர் ஏ. எல்.ஏ.ரஹ்மான் அவர்களின் தலைமையில் இல்மா வரவேற்பு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைப்பெற்றது .
இதில் பிரதம அதிதியாக மாவனல்லை வலய கல்வி பணிப்பாளர் எம் .ஏ .பிரியங்கா பிரியதர்சினி அவர்களும்,அதிதியாக பிரதேச கல்விப் பணிப்பாளர் நிரோஷா பெர்னாண்டோ அவர்களும்,விஷேட அதிதியாக இப்பாடசாலையின் பழைய மாணவரும் தொழிலதிபருமான சஹீமுள்ளா இக்பால் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.