பிறைந்துரைச்சேனை சக்ஸஸ் ஆங்கில மொழி தினம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

UPDATED: Aug 24, 2024, 2:47:16 PM

பிறைந்துரைச்சேனை சக்ஸஸ் முன்பள்ளி ஏற்பாடு செய்த ஆங்கில மொழி தினம் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சக்ஸஸ் முன்பள்ளி நிறுவுனர் ஏ.என்.எம்.றிழா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலய அதிபர் எல்.ரீ.எம். சாதிக்கீனும் சிறப்பு அதிதிகளாக வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் என். சஹாப்தீன் வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ், பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய அதிபர் எம்.எல்.நிஜாம்தீன், சக்ஸஸ் முன்பள்ளி முகாமையாளர் ஜே.அஸ்வர், பிறைந்துரைச்சேனை சக்ஸஸ் முன்பள்ளி பெற்றோர் சங்க தலைவி பீ.எப்.சிஹாரா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.




இதன்போது மாணவர்களின் ஆங்கில தின நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம்பெற்றன.

VIDEOS

Recommended