பாலித தேவரப்பெரும 64 வயதில் காலமானார்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Apr 17, 2024, 1:12:57 AM

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனஜீவராசிகள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை மத்துகம, யடதோலவத்த பிரதேசத்தில் உள்ள தனது தென்னந்தோப்பு காணியில் வேலை செய்து கொண்டிருந்த போது இரண்டு மின்சார வயர்களை இணைக்க சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

 விபத்தில் படுகாயமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

 1960 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பிறந்த பாலித தெவரப்பெரும காணி உரிமையாளராகவும் தோட்டக்காரராகவும் இருந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 63.

 ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர அரசியல்வாதியான இவர், மத்துகம உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவராகவும், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

அவரது இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

  • 1

VIDEOS

Recommended