நாளை மீண்டும் முடக்கப்படும் கொழும்பு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jul 18, 2024, 5:44:23 PM

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான தலையீட்டுடன் அனைத்து அரச துறை தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து பரந்த அரச சேவை தொழிற்சங்கக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்பும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

 அதன் முதற்கட்டமாக, தொழிற்சங்கங்கள் அரச சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து ஜூலை 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு முன்னால்.அடக்குமுறை, அரசு நிறுவனங்களை விற்பனை செய்தல், ஊதிய உயர்வு வழங்காமை, பணிநீக்க ஊதியம் ஆகியவற்றைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.

இந்தப் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்பதால், கொழும்பிலும் அருகாமையிலும் உள்ள மத்திய குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களையும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

VIDEOS

Recommended