ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்க இன்றைய தினம் புதிய அமைச்சரவையை நியமிப்பாரா?

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Sep 24, 2024, 3:37:33 AM

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 நவம்பர் மாத இறுதியில் தேர்தலை நடத்தும் நோக்கில் தேசிய மக்கள் சக்தி விரைவில் நாடாளுமன்றத்தை கலைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் புதிய பாராளுமன்றம் கூடும் வரை புதிய அமைச்சரவை பதவியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜித ஹேரத் மற்றும் ஹரினி அமரசூரிய மாத்திரமே தற்போது பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் காலியான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணராச்சி விரைவில் இணையவுள்ளார்.அவரது பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உட்பட நான்கு பேர் கொண்ட அமைச்சரவையை உள்ளடக்குமா அல்லது அமைச்சரவை விஸ்தரிக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்றதன் பின்னர் பரந்துபட்ட இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படலாம் என கடந்த வாரம் தேசிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமரசிங்க, வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 222 உறுப்பினர்களில் வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த திறமையான உறுப்பினர்கள் குழுவொன்று இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தெரிவு செய்யப்படும் என சமரசிங்க தனது உரையில் வலியுறுத்தினார்.

ஆரம்பத்தில் எமது அமைச்சரவையில் தோழர் அநுரா உட்பட நான்கு பேர் இருக்கின்றனர்.

மேலும் விவாதத்திற்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் ஏழு அல்லது எட்டு உறுப்பினர்களாக அமைச்சரவையை விரிவுபடுத்தலாம்,” என்று அவர் கூறினார்.

இதேவேளை, அரசாங்கத்தை நிர்வகிப்பதற்கு புதிய ஜனாதிபதி அமைச்சு செயலாளர்களை நியமிக்கவுள்ளதாக தேசிய மக்கள் படையின் சமந்த வித்யாரத்ன நேற்று ஆதரவாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜனாதிபதியின் செயலாளராக முன்னாள் சுங்க அதிகாரி கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

 

VIDEOS

Recommended