வாய்‌ பிளந்து நிற்கும் வயநாட்டு (பேய்).

கார்மேகம்

UPDATED: Aug 3, 2024, 11:17:29 AM

கேரளா வயநாடு

ஏய் கார்மேகமே ஏன் உன் கருங்கூந்தலை விரித்து வீசி பல நூறு நாசிகளை பூசி மூடினாய், 

அடி பச்சை மேனி கொண்ட இச்சை ராணியே நீ சறுக்கி விளையாட உணக்கு இந்த குருட்டு இரவு தான் கிடைத்ததா ( ஆண்டவா) ,

பிஞ்ச பாயினில் கொஞ்சம் ஓய்வுக்காக அவன் பணி செஞ்ச களைபதுவில் கண் அயர்ந்த நேரத்தில் ( இப்படியா) 

ஐயோ வாய்பிளிரக்கூட நேரமில்லை உன் செய்கைக்கு இது வீரமில்லை

India News Tamil

எங்களை மண்ணில் விதைத்து இனி யாரை இங்கே அறுவடை செய்வாய் 

உழைத்தவரெல்லாம் உருக்குலைந்து வாழ்ந்த இடத்தில் வீழ்ந்து எருவானோமே

இரவு கண்ணுறங்க செல்கையில் அவனிடம் வேண்டினேன் ஆண்டவா நாளைய விடியல் நலமாகட்டும் என ஆனால் நான் வாழ்ந்த இடமோ இன்று புது நிலமானதே,

தாகம் தீர்க்கக்தானே தண்ணீர் கேட்டோம் ஆனால் நீ எங்கள் வாயில் மண்ணையல்லவா கரைத்து ஊற்றினாய் வயநாட்டின்‌ வயலெங்கும் வாய்கரிசியின் விளைச்சல் அமோகம்   

காலன் வீட்டு கதவருகே இன்று வயநாட்டு வாய்கரிசி பொங்களோ பொங்கல் 

வயநாட்டு வருத்தத்தில் தி கிரேட் இந்தியா நியூஸ் குழுமம் நாங்களும் வருந்துகிறோம் இறைவா இனியொரு முறை இப்படியொரு துன்பத்தை தந்திடாதே .

 

VIDEOS

Recommended