• முகப்பு
  • அரசியல்
  • தமிழ் மக்களை தோல்வி பாதையிலே வழிநடாத்துகின்றனர் - என்ரணி எமில் காந்தன்

தமிழ் மக்களை தோல்வி பாதையிலே வழிநடாத்துகின்றனர் - என்ரணி எமில் காந்தன்

வவுனியா

UPDATED: Aug 3, 2024, 5:12:44 AM

தமிழ்தேசியம் என்ற அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளரை தெரிவு செய்வார்களாயின் அது தமிழ் மக்களை தோல்வி பாதையிலே வழிநடாத்துகின்றனர் என்பதே ஆகும் என ஐக்கிய மக்கள் கட்சியின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனி எமில்காந்தன் தெரிவித்தார்.

 வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கிலே தமிழ் கட்சிகள் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைத்து அதற்கான வேட்பாளரை முன்னிறுத்தும் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

அவ்வாறு தமிழ்தேசியம் என்ற அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளரை தெரிவு செய்வார்களாயின் அது தமிழ் மக்களை தோல்வி பாதையிலே வழிநடாத்துகின்றனர் என்பதே ஆகும். 

குறிப்பாக வடக்கு கிழக்கை மட்டும் மையமாக வைத்து தமிழ் தேசிய அடிப்படையில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் போது அவ்வாக்கின் மூலம் ஒரு ஜனாதிபதியினை தெரிவு செய்ய முடியாது என்பதுடன், அவ்வேட்பாளர் வெற்றியடைய முடியாது என தெரிவித்தார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended