• முகப்பு
  • அரசியல்
  • இபிஎஸ் பிறந்தாள் முன்னிட்டு மாங்காடு கோவிலில் தங்கத்தேர் இழுத்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள்.

இபிஎஸ் பிறந்தாள் முன்னிட்டு மாங்காடு கோவிலில் தங்கத்தேர் இழுத்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள்.

சுந்தர்

UPDATED: May 13, 2024, 5:59:12 AM

சென்னை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் அதிமுக வின் பொது செயலாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பெஞ்சமின், சோமசுந்தரம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

இபிஎஸ் க்கு நீண்ட ஆயுள் அளிக்க வேண்டி அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரினை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் வடம் பிடித்து கோயிலை சுற்றி இழுத்துச் சென்று வழிபாடு செய்தனர்.

நகர் செயலாளர் பிரேம் சேகர் ஏற்ப்பாட்டில் நடைபெற்றது. உடன் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended