• முகப்பு
  • அரசியல்
  • யார் வேண்டுமானாலும் ஓட்டு கேட்டு இருக்கலாம், ஆனால் நானோ வியாபாரிகளுக்கு துணையாக நிற்பேன் - திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா.

யார் வேண்டுமானாலும் ஓட்டு கேட்டு இருக்கலாம், ஆனால் நானோ வியாபாரிகளுக்கு துணையாக நிற்பேன் - திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா.

JK 

UPDATED: Apr 12, 2024, 6:56:33 AM

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கருப்பையா போட்டியிடுகிறார்.

தினம்தோறும் பல்வேறு பகுதிகளை தீவிர வாக்கு சேகரிப்பில் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று காந்தி மார்க்கெட் வியாபாரிகள், மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில் இதுவரை அநேகர் உங்களிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்று தருவதாக கூறி வாக்கு கேட்டு இருப்பார்கள்.

ஆனால், இன்று உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். நான் பாராளுமன்ற பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டால் வியாபாரிகளுக்கு துணையாக நிற்கிறேன் என்று தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் போது மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர் ரத்தினவேலு மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

VIDEOS

Recommended