• முகப்பு
  • அரசியல்
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் எழுச்சி மாநாடு ஒரு செய்தியை சொல்லி நிற்கப் போகிறது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் எழுச்சி மாநாடு ஒரு செய்தியை சொல்லி நிற்கப் போகிறது

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 24, 2024, 10:19:46 AM

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் எழுச்சி மாநாடு வெற்றி பெறுவதற்கு ம என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

 இளைஞர்களின் பலம் அவர்களுடைய எதிர்பார்ப்பு அவர்களுடைய திறமைகள்,ஆற்றல்கள் என்பனவற்றை சமூகத்துக்காக பங்களிப்பு செய்கின்ற ஒரு மாநாட்டினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருதுவில் நடத்துவதற்கு வழங்கிய அனுமதிக்காக அவருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கின்றோம்.

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் எழுச்சி மாநாடு ஒரு செய்தியை சொல்லி நிற்கப் போகிறது.

 அது வெறுமனே ஒரு சமூகத்துடைய அங்கீகாரம் மட்டுமன்றி இளைஞர் சமூகத்தின் பங்களிப்பின் வெளிப்பாடாக அது அமையப்போகிறது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் எழுச்சி மாநாடானது இந்த நாட்டுடைய முழு இளைஞர்களையும் எமது பக்கத்தின் பால் ஈர்ப்பதற்கான ஒரு மாநாடாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 இந்த நிலையில் இந்த அம்பாறை மாவட்ட எழுச்சி மாநாடு வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட இளைஞர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன் என்று  அகில இலங்கை makkal காங்கிரசின் கல்முனை மாநகர சபையின்  முன்னாள் உறுப்பினர் எம். மனாப் வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIDEOS

Recommended