• முகப்பு
  • அரசியல்
  • சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கியவர் அதிமுக முதலமைச்சர் எம்ஜிஆர் - திமுக எம்எல்ஏ.

சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கியவர் அதிமுக முதலமைச்சர் எம்ஜிஆர் - திமுக எம்எல்ஏ.

L.குமார்

UPDATED: Sep 23, 2024, 10:55:13 AM

திருவள்ளூர் மாவட்டம் 

சென்னை மக்களின் குடிநீர் ஆதாராமாக இருப்பது திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமாகும்.  இந்த ஏரிக்கான நீர்வரத்து மழை நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரமாகும்.

ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கமாக உள்ளது.

வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் இன்றைய காலை நிலவரப்படி மொத்தக் கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் வெறும் 64 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு உள்ளது.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்

இதேபோல் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் நீர் இருப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டுத் திட்டப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு நீர் திறந்து விட தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள்,ஆந்திர மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 

ஆனால், அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால் தண்ணீர் திறந்து விடுவதில் தாமதமானது.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கண்டலேறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.

கிருஷ்ணா நதிநீர்

இதைத் தொடர்ந்து கடந்த 19-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் 500 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக 1,300 கன அடியாக உயர்த்தப்பட்டு நீர் திறக்கப்பட்டது. 

ஆந்திர மாநிலம் கண்டவேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு  152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வந்தடைந்தது.

சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் பங்கேற்று பேசிய போது 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மக்களுக்கு தண்ணீர் ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயிலில் வந்த சூழலில் அதன் பின்பு ஆட்சிக்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆர் தீவிர முயற்சியில் சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறை போக்க 1983 ஆம் ஆண்டு ஆந்திர முதலமைச்சர் என்.டி. ராமராவ் உடன் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 12 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது என திமுக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் புகழாரம் சூட்டினார்.

 

VIDEOS

Recommended