• முகப்பு
  • மற்றவைகள்
  • ஓட்டலில் சிக்கன் பக்கோட போட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அதிமுக கவுன்சிலர்

ஓட்டலில் சிக்கன் பக்கோட போட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அதிமுக கவுன்சிலர்

பிரேம்

UPDATED: Apr 14, 2024, 3:06:17 PM

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பில் மருத்துவர் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்ப்பட்ட நெற்குன்றம் பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக சென்னை மாநகராட்சி 145 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

அப்போது ஓட்டல் ஒன்றில் வாக்கு சேகரிக்க சென்ற கவுன்சிலர் அங்கு சிக்கன் பக்கோடாவை எண்னைய் சட்டியில் போட்டு வறுத்தபடி ஓட்டலுக்கு வரும் வாக்களார்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்,

மேலும் அப்பகுதி தாய்மார்களை சந்திந்த கவுன்சிலர் காலில் விழுந்தும் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட சாதனைகளை சொல்லியும் வாக்கு கேட்டார்,அதே போல் வியபாரிகளை சந்தித்தும் வாக்கு சேகரித்தார்.

உடன் வட்ட அதிமுக வை சேர்ந்த துணை வட்ட செயலாளர் பாரதி,பொருளாளர் சரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் இரட்டை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.

VIDEOS

Recommended