![](assets/tgi-logo2.jpg)
- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பொன்னேரியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்யாத நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
பொன்னேரியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்யாத நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
![பொன்னேரியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்யாத நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.](https://api.thegreatindianews.com/uploads/original/8f31df8d-516b-4353-840f-2c25ae25f538-puratchi_bharatham.jpg)
![](assets/avatar-profile-icon.webp)
Lகுமார்
UPDATED: Feb 26, 2024, 8:52:32 AM
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் கடந்த ஆறு ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் திட்டம் முடிவடையாத நிலையில் இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் நகராட்சியின் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?
மேலும் தாயுமான்செட்டி தெருவில் கடந்த வடகிழக்கு பருவ மழையால் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
Also Read : தமிழகம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் 8.33 லட்சம் கோடி கடனில் இருக்கிறோம் - சரத்குமார்
மேலும் பொன்னேரி-மீஞ்சூர் இடையே உள்ள திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் சாலைகள் பழுதடைந்துள்ளதாலும் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்
இதனை கண்டித்து பொன்னேரியில் உள்ள அண்ணா சிலை அருகில் பொன்னேரியில் குண்டும் குழியுமான பள்ளங்களை சரி செய்ய வேண்டும் பொன்னேரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்
பொன்னேரியில் இயங்கி வரும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்தும் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.