தமிழகம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் 8.33 லட்சம் கோடி கடனில் இருக்கிறோம்.

ரமேஷ்

UPDATED: Feb 25, 2024, 3:02:15 PM

கும்பகோணத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ அசைவ விருந்து நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு சமத்துவ விருந்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், திருச்சியில் நேற்று 19 பேர் கொண்ட உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. அதில் அவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்

அந்த கருத்துக்களை தீர ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய கட்டத்திற்கு வந்து விட்டோம். இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிவை அறிவிப்போம்.

ஒற்றைக் கருத்து இருந்தால் உடனடியாக முடிவெடுத்திருக்க முடியும், ஒற்றை கருத்து இல்லாததால் எதில் பயணித்தால் இனி எடுக்கின்ற முடிவு சிறந்த முடிவாக இருக்கும்.

கட்சி தொடங்கி 16 ஆண்டுகள் கடந்து 17 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம் இனி எடுக்கின்ற முடிவு வெற்றி முடிவாக இருக்கும்.Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?

விவசாயிகள் என்ன கேட்கின்றனர் என்பதை டெல்லி அரசு செவி சாய்த்து கேட்டு அது நியாயமான வற்றை உடனடியாக நிவர்த்தி செய்வதும், அவர்களுக்கு கருத்து சொல்ல வேண்டியிருந்தால் அதில் மாற்றுக் கருத்து இருந்தால் அதையும் விவரமாக எடுத்துச் சொன்னால் சிறப்பாக இருக்கும்.

தமிழகம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் 8.33 லட்சம் கோடி கடனில் இருக்கிறோம். வரவு குறைவாகவும் செலவு அதிகமாகவும் இருக்கிறது அதற்கு முக்கிய காரணம் இலவசம்.

பற்றாக்குறை இருக்கும்போது இலவசம் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. ஒவ்வொரு தமிழக குடிமகனின் தலையிலும் கடனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முற்போக்கு திட்டங்கள் என்ன, இந்த திட்டங்களால் 8.33 லட்சம் கோடி இன்னும் ஐந்து வாரத்தில் தீர்த்து வைக்க முடியும் என்ற திட்டத்தினை யாரும் வகுக்கவில்லை.

தொழில் வளம், தொழிற்சாலைகளை பெருக்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற திட்டங்கள் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. 

Also Watch : தேசிய கீதத்தை மறந்தாரா அல்லது புறக்கணிதாரா திமுக எம்எல்ஏ

கவர்னர் அரசு என்ன சொல்கிறதோ அதை கவனித்து உடனடியாக எந்த ஒரு கோப்பாக இருந்தாலும் அனுமதி தருவது தான் அவருடைய வேலை.

அதற்கு முட்டுக்கட்டையாக இல்லாமல் சுமுகமாக நடப்பதற்கு தமிழக அரசு எடுக்கின்ற முடிவு அதனை விவரமாக பேசி உடனடியாக தீர்வு காணும் நிலையில்தான் கவர்னர் இருக்கிறார்.

கூட்டணி குறித்து பேசி முடித்தவுடன் எத்தனை இடங்களில் நின்றால் நாம் வெற்றி பெற முடியும் என்ற இலக்கு வேண்டும்.

Also Read : கோத்தகிரி அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் குப்பைகள் மிதந்தால் பரபரப்பு.

எந்த இயக்கத்துடன் கூட்டணி சேர்கிறோமோ அந்த இயக்கமும் வெற்றி பெற வேண்டிய சூழல் உருவாக வேண்டும். இவையெல்லாம் கலந்து பேசி முடிவு எடுக்க உள்ளோம்.

நிகழ்ச்சியில் கும்பகோணம் காங்கிரஸ் கட்சி மேயர் சரவணன், பாஜக மாவட்ட தலைவர் சதீஷ் உள்ளிட்ட எதிர், எதிர்க்கட்சியை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended