• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருப்பூர் பல்லடம் கள்ளக் கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை கொலையாளியை சுட்டு பிடித்தனர்.

திருப்பூர் பல்லடம் கள்ளக் கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை கொலையாளியை சுட்டு பிடித்தனர்.

செல்வம்

UPDATED: Mar 18, 2024, 10:38:37 AM

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறை சேர்ந்த மோகன்ராஜ் (49), அவரது சகோதரர் செந்தில்குமார் (46), தாயார் புஷ்பவதி (68), சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகியோரை, கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி இரவு குடிபோதையில் இருந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது.

இதுதொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்தனர்,

Also Read : பூந்தமல்லி அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் பள்ளி வேன் கிளீனர்.

திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம், திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து , தேனி மாவட்டம் உத்தமபாளையம் முத்தா லபுரம் பகுதியைச் சேர்ந்த சோனை முத்தைய்ய , குட்டி (எ)வெங்கடேஷ் மற்றும் அய்யப்பன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

Also Read : 11.15 மணி நேரம் தண்ணீரில் மிதந்தபடி 8 வயது சிறுவன் யோகா செய்து உலக சாதனை.

இந்த வழக்கில் 800 பக்கத்திற்கு குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

Also Read : பொன்முடிக்கு உயர்கல்வித் துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் மறுப்பு.

இந்த சம்பவத்தில் விசாரணையின் போது தப்பிக்க முயன்ற குட்டி என்ற வெங்கடேசை போலீசார் சுட்டு பிடித்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவனை ஆம்புலன்ஸில் அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

VIDEOS

RELATED NEWS

Recommended