• முகப்பு
  • சென்னை
  • மதுரவாயல் பைபாஸில் திடீரென பிரேக் டவுனாகி நின்ற பேட்டரி கார் அடுத்தடுத்து பின்னால் வந்த லாரி, கார் மோதி விபத்து.

மதுரவாயல் பைபாஸில் திடீரென பிரேக் டவுனாகி நின்ற பேட்டரி கார் அடுத்தடுத்து பின்னால் வந்த லாரி, கார் மோதி விபத்து.

சுந்தர்

UPDATED: Feb 26, 2024, 6:58:19 AM

சென்னை மதுரவாயல் நோக்கி போரூர் பைபாஸ் அருகே சென்று கொண்டிருந்த பேட்டரி கார் ஒன்று பிரேக் டவுனாகி திடீரென சாலையின் நடுவே நின்றதால், இந்த காருக்கு பின்னால் வந்த லாரி காரின் மீது மோதியது.

மேலும் அந்த லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு காரும் லாரின் பின்பக்கத்தில் பலமாக மோதியது.

Also Read : தமிழகம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் 8.33 லட்சம் கோடி கடனில் இருக்கிறோம் - சரத்குமார்

இதில் காரின் முன் பக்கம் சுக்கு நூறாக நொறுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போக்குவரத்து போலீசார் லாரி மற்றும் இரண்டு கார்களையும் சாலை ஓரமாக அப்புறப்படுத்தினர்.

Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்

மேலும் லாரிக்கு பின்னால் வந்த காரில் கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பயணித்த நிலையில், குழந்தையின் தாய்க்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended