போலீஸாருக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி.

செந்தில் முருகன்

UPDATED: May 12, 2024, 5:10:16 PM

மயிலாடுதுறை மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸாருக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா அறிவுறுத்தி இருந்தார்.

இதைடுத்து டிஎஸ்பி திருப்பதி ஏற்பாட்டின் படி மயிலாடுதுறையில் உள்ள டி.இ.எல்.சி பள்ளியில் போலீசாருக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை பதஞ்சலி யோகா மையத்தின் தலைமை பயிற்றுனர் சரவணன் போலீசாருக்கு பயிற்சி வழங்கினார்.

சூரிய நமஸ்காரம், சர்வங்காசனம், தியானம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற நியூட்ரிஷியன் வகுப்பில், போலீசார் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க என்ன உணவுகளை, எந்த விகிதாச்சாரத்தில் உட்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

இதில் 50 க்கு மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்று பலனடைந்தனர்.

 

VIDEOS

Recommended