• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மன்னார்குடியில் அரசு மதுபாட்டிலை அதிக விலைக்கு விற்ற டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி மூன்றுபேர் தப்பி ஓட்டம். 

மன்னார்குடியில் அரசு மதுபாட்டிலை அதிக விலைக்கு விற்ற டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி மூன்றுபேர் தப்பி ஓட்டம். 

ஜெயராமன்

UPDATED: May 5, 2024, 1:10:13 PM

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழப்பனையூர் கிராமத்தைச் சேர்ந்த புத்தாண்டி மகன் பாலசுப்பிரமணியன் இவர் மன்னார்குடி ருக்குமணி பாளையம் அருகில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

சொக்கநாதபுரத்தை சேர்ந்த அருள்முருகன் , சரத்குமார் , அஜீத் (27) சிந்து (எ) திவ்யராஜன் (30) ஆகிய நான்குபேரும் புதிதாக வந்துள்ள ரூ 140 மதிப்புள்ள வீரன் என்கிற மதுபானத்தை வாங்கியுள்ளனர் . சூப்பர்வைசராக உள்ள பாலசுப்பிரமணியன் பாட்டிலுக்கு ரூ 20 அதிகமாக வைத்து ரூ 160 கேட்டுள்ளார்.

எதற்கு ரூ 20 அதிகாமக கேட்கிறீர்கள். பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று கூறியிறுக்கிறார் பாலசுப்பிரமணியன் மீதம் ரூ 10 எதற்கு என்றும் மதுவாங்கியதற்கு பில் தாருங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு பாலசுப்பிரமணியன் தரமுடியாது என மறுத்துள்ளார். இதற்குள் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் வாங்கிய மதுபாட்டிலால் சூப்பர்வைசர் பாலசுப்பிரமணியத்தை தலையில் அடித்துள்ளனர். 

இதில் பலத்த காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தில் சூப்பர்வைசர் பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்டையில் அருள்முருகனை மன்னார்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தப்பி ஒடிய மூன்றுபேரையும் சிசி டிவி காட்சி அடிப்படையில் காவல்துரையினர் தேடிவருகின்றனர் . அவர்கள் பயன் படுத்திய எர்டிகா காரை பறிமுதல் செய்துள்ளனர்.

அதிகவிலைக்கு விற்ற டாஸ்மாக் சூப்பர்வைசரை நான்குபேர் சேர்ந்து மது பாட்டிலால் தாக்கிய சம்பவம் மன்னார்குடியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

 

  • 3

VIDEOS

Recommended