- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருநெல்வேலி டவுன் மகளிர் காவல் ஆய்வாளர் மாணவர்களிடையே போக்சோ மற்றும் போதை பொருள்களை பற்றிய விழிப்புணர்வு
திருநெல்வேலி டவுன் மகளிர் காவல் ஆய்வாளர் மாணவர்களிடையே போக்சோ மற்றும் போதை பொருள்களை பற்றிய விழிப்புணர்வு
முகேஷ்
UPDATED: Oct 17, 2024, 6:32:21 PM
திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலி, பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி (16.20.2024) நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி டவுன் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர், ஆன்டனிஜெகதா கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
குறிப்பாக மாணவர்கள் ஜாதி சண்டை போன்ற பிரச்சனைகள் வராதவாறு பார்த்துக் கொள்ளவும், தீய வழியில் செல்லாமல் இருக்க போக்சோ போன்ற சட்டத்தின் பிரிவுகளை எடுத்துக் கூறியும், போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் போதை பொருளுக்கு எதிராகவும் நடந்து கொள்ள அறிவுரை கூறினார்.
விழிப்புணர்வு
மேலும் மாணவர்களுக்கு படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இது போன்ற விழிப்புணர் நிகழ்ச்சிகள் பள்ளி மாணவ மாணவியருக்காக தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.