• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருச்சியில் பயனாளிகளுக்கு உடனே வீடு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டம்.

திருச்சியில் பயனாளிகளுக்கு உடனே வீடு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டம்.

JK

UPDATED: Oct 15, 2024, 12:45:51 PM

திருச்சி மாவட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தராநல்லூர் கல்மந்தை காலனி கிளை செயலாளர் மகாலிங்கம், சங்கீதா ஆகியோர் தலைமையில் பாலக்கரை பகுதியில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு கோரிக்கை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கராஜன், லெனின் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி உரையாற்றினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

போராட்டத்தின் போது திருச்சி தாராநல்லூர் கல்மந்தை பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. 

இதனை பயனாளிகளுக்கு வழங்குவதில் கடந்த 5ஆண்டுகளுக்கும் மேலாக காலதாமதம் செய்வதை கைவிட்டு உடனே வழங்க வேண்டும், 5வருடங்களாக  6 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்படாமல் உள்ள பயனாளிகளுக்கு உடனே வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும், 

Latest Trichy District News

வீட்டு ஒதுக்கீடு செய்தவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் மற்றும் மின்இணைப்பு வழங்க வேண்டும், குடியிருப்பு பகுதியில் தூர்ந்து போன குடிநீருக்கான ஆழ்துளை கிணறை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended