பூந்தமல்லி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

S.முருகன்

UPDATED: Jun 10, 2024, 7:18:39 PM

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் இவரது மனைவி ஜெயா ஆவடியில் உள்ள மாமியார் வீட்டில் இருந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை பூந்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்ததையடுத்து கணவன் மனைவி குழந்தைகளுடன் வெளியேறிய நிலையில் திடீரென கார் கொழுந்து விட்டு ஏரிய ஆரம்பித்தது.

இதனை அடுத்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காரில் தீயை அணைத்தனர்

இதில் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாவது உரிய நேரத்தில் காரில் இருந்து இறங்கியதால் கணவன் மனைவி குழந்தைகளுடன் உயிர் தப்பினர்.

 

VIDEOS

Recommended