ஸ்ரீசத்குரு தியாகராஜர் 257 ஜெயந்தி விழா.

ஜெயராமன்

UPDATED: May 13, 2024, 10:29:50 AM

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 257வது ஜெயந்தி விழாவினையொட்டி மேலவடம்போக்கித்தெருவில் உள்ள சங்கீத மும்மூர்த்திகளின் அவதார ஜென்ம பூமியில் 200க்கும் மேற்பட்ட கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் பஞ்சரெத்தின கீர்த்தனைகளை பாடி இசை ஆராதனை வழிபாடு நடத்தி வழிபாடு நடத்தினர்.

சங்கீத மும்மூர்த்திகள ஸ்ரீசியாமாசாஸ்திரிகள், ஸ்ரீசத்குருதியாகராஜர், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் ஆகிய மூவரும் கி.பி.17ம் நூற்றாண்டில் திருவாரூரில் சமகாலத்தில் பிறந்து சாஸ்திரிய சங்கீதத்தை வளர்த்து இசை என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்துதந்து உலக அளவில் கொண்டு சென்றவர்கள். 

சங்கீத மும்மூர்த்திகளில் இரண்டாவதாக அவதரித்த ஸ்ரீசத்குரு தியாகராஜர் திருவாரூர் புதுத்தெருவில் உள்ள இல்லம் ஒன்றில் கிபி.1767ம் ஆண்டு சித்திரை மாதம் பூச நட்சத்திர நாளில் பிறந்தார். இவர் வாழ்நாளில் எண்ணற்ற சங்கீத கீர்த்தனைகளை இறைவன் மீது இயற்றியுள்ளார்.

குறிப்பாக ஸ்ரீஇராமபிரான் மீது ஸ்ரீசத்குரு தியாகராஜர் சங்கீத கீர்த்தனைகளை பாடியுள்ளார். இவரது எண்ணற்ற கீர்த்தனைகளில் மிகவும் பிரசித்திபெற்றது பஞ்சரெத்தின கீர்த்தனைகள்.       

பல்வேறு சிறப்புகளை கொண்ட ஸ்ரீசத்குருதியாகராஜரின் ஜெயந்தி விழாவினையொட்டி அவர் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.  

தொடர்ந்து சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான திருவாரூர் மேலவடம்போக்கித்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் அவதார ஜென்ம பூமியில் 200க்கும் மேற்பட்ட கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் அமர்ந்து ஸ்ரீசத்குரு தியாகராஜர் இயற்றிய பிரசித்திபெற்ற பஞ்சரெத்தின கீர்த்தனைகளும்,

மேலும் அவரது பல்வேறு சங்கீத கீர்த்தனைகளையும் பாடி இசை ஆராதனை செய்து ஸ்ரீசத்குரு தியாகராஜரை மனமுருக வழிபட்டனர்.

 

  • 1

VIDEOS

Recommended