வெளிமாவட்ட வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் 9 - ந் தேதி முதல் 2 - மாதங்களுக்கு தடை விதிப்பு

கார்மேகம்

UPDATED: Sep 1, 2024, 8:49:56 AM

இராமநாதபுரம்

வருகிற 09- ம் தேதி முதல் 2 மாதங்களுக்கு  163 -(1) தடை பிறப்பிக்கப்படுகிறது என்றும் வெளிமாவட்ட வாடகை வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தும் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்

( தடை உத்தரவு )

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11- ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது 

அக்டோபர் 30- ந்தேதி பசும்பொன்னில் தேவர் குரு பூஜை நடைபெறுகிறது எனவே  ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு வருகிற 09- ந் தேதி முதல் 2 மாத காலத்திற்கு 163-(1) தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்

இமானுவேல் சேகரன் நினைவு தினம்

இது தவிர 09- ந்தேதி முதல் வருகிற 15- ந்தேதி வரையும் அக்டோபர் 25- ந்- தேதி முதல் 31- ந் தேதி வரை வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள் சரக்கு வாகனங்கள் டிராக்டர்கள் மோட்டார் சைக்கிள்கள் ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்படுகிறது 

( அனுமதி பெற வேண்டும் )

நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்குள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வர வேண்டும் மேலும் அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்றுதான் வரவேண்டும்

தேவர் குரு பூஜை 

இந்த தகவலை கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங்காலோன் தெரிவித்துள்ளார் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த 163(1) தடை உத்தரவு அமலுக்கு வருவதால் எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் அனுமதி பெற்று அவர்கள் தெரிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

 

VIDEOS

Recommended