செங்கம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்.

அஜித் குமார்

UPDATED: Jul 18, 2024, 5:21:45 AM

மக்கள் சாலை மறியல்

செங்கம் அருகே குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்ப வத்தால் பரபரப்பு ஏற் பட்டது.

செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி கிராமத் தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார் பில் குடிநீர் விநியோகம்  செய்யப்பட்டு வருகி றது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இப்ப குதியில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில் லையாம். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

News

இதையடுத்து, நேற்று காலை செங்கம்-இளங்குன்னி சாலையில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Sengam News

அப்போது போலீசார், சம்பந்தப் பட்ட நபர்களிடம் பேசி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதைய டுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended