திருவாரூர் அருகே புதிய மனநல காப்பகம் திறப்பு.

ஜெயராமன்

UPDATED: May 5, 2024, 7:25:02 PM

திருவாரூர் அருகே வண்டம்பாலை பகுதியில் ஹீடுஇந்தியா சார்பில் திருவாரூர் மனநலகாப்பகத்தினை திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கலைவாணன் திறந்து வைத்தார் .

மேலும் இந்த மனநிலை காப்பகத்தை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்த பின்னர் தெரிவித்ததாவது... மனநல காப்பகம் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அரசின் சார்பிலும் அரசியல் கட்சி சார்பிலும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பேசினார். 

இந்தநிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலு, தமிழ்நாடு அரசு சென்னை குடும்ப நலம் மருத்துவப் பணிகள் இயக்குனர் மருத்துவர் விஸ்வநாதன், தொண்டு நிறுவன நிறுவனர் ராஜா, சினிமா நடிகர் மற்றும் இயக்குனர் பிளாக் பாண்டி ,ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி கலைக்கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

  • 2

VIDEOS

Recommended