வெகு நேரம் காத்திருந்த மகளிரை பேருந்தில் ஏற்றாமல் அலட்சியம்

பரணி

UPDATED: Aug 4, 2024, 5:18:46 AM

ராணிப்பேட்டை மாவட்டம்

ஆற்காடு பேருந்து பணிமனையில் இருந்து ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, வழியாக கல்புதூர் செல்லும் அரசு பேருந்துக்காக வாலாஜா பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்கள் பேருந்து வந்ததும் ஏற முயன்றனர் 

பேருந்து முழுவதும் காலியாக இருந்த போதும் அந்த பேருந்தில் இருந்த நடத்துனர் இந்த பெண்களை ஏற விடாமல் தடுத்து விட்டார்.

அரசு பேருந்து

அங்கிருந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் அனைவரும் குரலிட்டும் அவர் பொருட்படுத்தாமல் ஏற விடாமல் பேருந்து சென்றுவிட்டது 

இந்த பேருந்து பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்து ஆகும்

கிராமபுறங்களில் செல்லும் எல்லா பேருந்துகளும் இதே போன்ற நிலை தான் பெண்கள் மட்டும் இன்றி பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் இதே நிலையில் தான் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் 500 ஆண்டுகள் கடந்தாலும் இது போன்ற அவலங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் நம் இந்திய திருநாட்டில் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

VIDEOS

Recommended