• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகர்கோவில் அருகே வைத்தியநாதபுரத்தில் கடந்த நான்கு நாட்களாக நடு ரோட்டில் இருக்கும் பேரிகாடு அலட்சியம் காட்டும் மாநகராட்சி

நாகர்கோவில் அருகே வைத்தியநாதபுரத்தில் கடந்த நான்கு நாட்களாக நடு ரோட்டில் இருக்கும் பேரிகாடு அலட்சியம் காட்டும் மாநகராட்சி

முகேஷ்

UPDATED: Jun 11, 2024, 5:42:04 AM

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 37-வது வார்டு வைத்தியநாதபுரம் ஆற்றங்கரை சந்திப்பில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவு நீர் சாலையில் ஆறாக ஓடுவதோடு பாதாள சாக்கடை மூடி போடப்பட்டிருந்த இடத்தை சுற்றிலும் மிகப்பெரிய பள்ளமும் ஏற்பட்டது.

இதனை கவனித்த அப்பகுதி மக்கள் பள்ளத்தில் வாகனங்களில் செல்வோர் விழுந்து விடக் கூடாது என தடுப்புகளை வைத்தனர். கடந்த நான்கு நாட்களாக இதே நிலைதான்.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் தினமும் சென்று வருகின்றன. எத்தனையோ அரசு அதிகாரிகள் இந்த சாலையில் பயணிக்கின்றனர். 

யார் கண்ணிலும் இந்த அவலம் படவில்லையா என்பதே பொதுமக்களின் கேள்வி? சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையும் மாநகராட்சி நிரிவாகமும் இனியாவது நடவடிக்கை எடுக்குமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

 

VIDEOS

RELATED NEWS

Recommended