• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டி சௌமியா அன்புமணி திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டி சௌமியா அன்புமணி திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

சுரேஷ்பாபு

UPDATED: May 22, 2024, 8:44:26 AM

முருகப்பெருமானின் 5- படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராம்தாஸ் மனைவி சௌமியா அன்புமணி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டார்

இந்த நிலையில் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் சௌமியா அன்புமணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் விபூதி, பிரசாதங்கள், பூ மாலை, அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சௌமியா அன்புமணியிடம் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

தேர்தலில் வெற்றி பெற வேண்டி சாமி தரிசனம் செய்ய வந்ததாக அவர் தெரிவித்தார்.

 

  • 1

VIDEOS

Recommended