• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி மேம்பாலம் பகுதியில் பொலிரோ ஜீப் டாரஸ் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.

சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி மேம்பாலம் பகுதியில் பொலிரோ ஜீப் டாரஸ் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.

சண்முகம்

UPDATED: Sep 10, 2024, 7:45:20 AM

கடலூர் மாவட்டம்

சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடி பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சை நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட புதிய மேம்பாலத்தில் வந்த பொலிரோ ஜீப்பும், சாலைப் பணிகளுக்கு மண் ஏற்றி செல்லும் டாரஸ் லாரி ஆகியவை நேருக்கு நேர் மோதி பொலிரோ ஜீப் முன் பக்கம் கடுமையாக சேதம் அடைந்தது. 

பொலிரோ ஜீப்பில் இருவர் மட்டுமே வந்த நிலையில் ஜீப்பை ஒட்டிக்கொண்டு வந்த நெய்வேலியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ரவிச்சந்திரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

விபத்து

மேலும் அருகில் அமர்ந்து வந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த புதிய விரிவாக்க சாலையில்

போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை.இந்நிலையில் இந்த சாலையில் சாலையோரம் நெல் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் குவியல் மூடி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொலிரோ ஜீப் நெல் குவியல் மீது எதிர்பாராமல் ஏறியதால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டாரஸ் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Breaking News in Tamil

இதனிடையே சாலை விரிவாக்க பணியில் போக்குவரத்து தொடங்காத நிலையிலும் வாகனங்கள் செல்வது, இது போன்ற விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது எனவும், அரசு தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பயன்பாட்டுக்கு வராத சாலையில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும்.

விபத்துக்கள் ஏற்படுவதையும் தடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended