கடலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

சண்முகம்

UPDATED: Jul 16, 2024, 4:03:45 AM

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் , கடலூர் சப் கலெக்டர், கடலூர் தாசில்தார் ஆகியோரை கண்டித்து காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலரை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்து, சுமார் 40க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அதிக வேலைப்பளுவை வழங்குவதை கண்டித்தும், அவர்களுக்கான அடிப்படை சலுகைகளை வழங்காமல் அலை கழிப்பது குறித்தும் கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

 

VIDEOS

Recommended