கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி கழுத்து அறுத்து தற்கொலை.

ராஜா

UPDATED: Jul 18, 2024, 6:55:41 PM

District News & Updates in Tamil 

தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் முருகன் இவரின் மனைவி அன்புக்கரசி. முருகன் கடந்த ஓராண்டு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து அன்புகரசி தனது மகனுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். 

இன்று தோட்டத்து வீட்டிற்கு வேலைக்குச் சென்ற நபர்கள் பார்த்த போது அன்புகரசி கழுத்து அறுபட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Latest District News in Tamil

உடனே கூடலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அன்புகரசியின் உடலை கைப்பற்றி உடல் கூறு பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து முதல் கட்ட விசாரணையில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் தானாகவே கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தற்கொலை

மேலும் இந்த சம்பவம் குறித்து கூடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended