திருச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் - 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

JK

UPDATED: Oct 2, 2024, 5:38:57 AM

திருச்சி

திருச்சி கன்மலை டிரஸ்ட் மற்றும் ஆலோசனை கர்த்தர் திருச்சபை சார்பில் திருச்சி காஜா பேட்டையில் உள்ள திருச்சபை வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பரிசோதனை முகாமில் 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். 

பரிசோதனையில் கண்ணில் குறை உள்ளவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டு அவர்கள் பயன்படுத்துவதற்கு கண்ணாடிகளும் இலவசமாக வழங்கபட உள்ளது. 

மருத்துவர் பொம்மின் இப்ராஹிம், மற்றும் சசிகுமார் ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர்.

முகாமில் ஆலோசனை கர்த்தரை திருச்சபையின் தலைமை போதகர் சேவியர், கன்மலை டிரஸ்டின் நிறுவனர் வில்பர்ட்எடிசன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

VIDEOS

Recommended