சேத்தியாத்தோப்பு அருகே குமாரக் குடியில் தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதம்.

சண்முகம்

UPDATED: Jul 18, 2024, 5:10:39 AM

கடலூர் மாவட்டம் 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தப்பு அருகே குமாரக்குடி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில் ரமேஷ் என்பவரின் கூரை வீடு இருந்து வருகிறது. இந்த வீடு திடீரென எதிர்பாராமல் தீப்பிடித்து எரிந்தது. 

உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் அதற்குள் வீட்டின் அனைத்து பகுதிகளும் முழுமையாக எரிந்து சேதம் ஆனது.

Latest District News in Tamil

இந்நிலையில் வீட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவை தீயில் எரிந்து கருகிய நிலையில் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது. 

தீ விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட போது நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தவர்கள் எந்தவித ஆபத்தும் இன்றி அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தபினர்.

 

VIDEOS

Recommended