ஸ்ரீமுஷ்ணம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற அண்ணன் தம்பிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு 

சண்முகம்

UPDATED: Apr 17, 2024, 1:53:39 PM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்அருகே நந்தீஸ்வர மங்கலம் கிராமத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.

இவரது மகன்களான திலீப் ரஜ்(16), தினேஷ்(14) ஆகியோர் வெளியூரில் தாங்கள் தங்கி இருந்த ஹாஸ்டலில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தனர்.

பாட்டி வீட்டில் தங்கி இருந்த நிலையில் இவர்கள் இன்று அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது குளத்தின் ஆழமான பகுதியில் சிக்கி இருவருமே எதிர்பாராமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனை எதேச்சையாக கண்டகிராம மக்கள் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கி அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

மேலும் இறந்த இரண்டு சிறுவர்களையும் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அண்ணன், தம்பிகள் எதிர்பாராமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தால் 

கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

  • 1

VIDEOS

Recommended