• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் மோதி பயங்கர விபத்து.

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் மோதி பயங்கர விபத்து.

இரா.இராஜா

UPDATED: Oct 12, 2024, 12:58:57 PM

தேனி மாவட்டம்

உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே கேரள பதிவு கொண்ட லாரி மரங்களை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்று கொண்டு இருந்தது, அப்போது எதிர்பாராதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனம், மின்சார கம்பத்தில் மோதி பயங்கரமாக விபத்தை ஏற்படுத்தியது.

இதில் சாலை அருகே நின்றிருந்த நான்கு நபர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர், உடனடியாக அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Breaking News Today In Tamil

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நான்கு நபர்களையும் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் செங்குட்டு வேலவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Theni District News

மேலும் இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பொதுமக்கள் யாரும் உள்ளனரா என்று தீயணைப்பு மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடி விட்டதாகவும் ஓட்டுனரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும், விபத்தை நேரில் பார்த்த அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் அதிகமாக கூடும் காலைப் பொழுதில் இந்த விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போலீசார் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended