20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் நாசம்.

அஜித் குமார்

UPDATED: May 6, 2024, 7:52:52 AM

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடையில் வாட்டி வதைத்து நிலையில் திடீரென திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் வீசிய கனமழை பெய்தது.

இந்த மழையின் போது வீசிய பலத்த காற்றால் சந்தவாசல் மற்றும் படவேடு, கேளூர் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து நாசமானது.

இதனால் விவசாயிகள் செய்வதறியாமல் வேதனை அடைந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

 

  • 2

VIDEOS

Recommended