- முகப்பு
- தினம் ஒரு திருக்குறள்
- தினம் ஒரு திருக்குறள். 09-07-2024
தினம் ஒரு திருக்குறள். 09-07-2024
தினம் ஒரு திருக்குறள்
UPDATED: Jul 8, 2024, 4:34:39 PM
குறள் 190:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
மு.வரதராசன் விளக்கம்:
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?.
சாலமன் பாப்பையா விளக்கம்:
புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?.
கலைஞர் விளக்கம்:
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.
English Couplet 190:
If each his own, as neighbours' faults would scan,
Could any evil hap to living man?.
Couplet Explanation:
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?.
Transliteration(Tamil to English):
Edhilaar kutrampoal thangutranG kaaNkiRpin
theedhuNtoa mannum uyirkku