தினம் ஒரு திருக்குறள். 09-07-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Jul 8, 2024, 4:34:39 PM

குறள் 190:

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

மு.வரதராசன் விளக்கம்:

அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?.

சாலமன் பாப்பையா விளக்கம்:

புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?.

கலைஞர் விளக்கம்:

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

English Couplet 190:

If each his own, as neighbours' faults would scan,

Could any evil hap to living man?.

Couplet Explanation:

If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?.

Transliteration(Tamil to English):

Edhilaar kutrampoal thangutranG kaaNkiRpin

theedhuNtoa mannum uyirkku

VIDEOS

Recommended