தினம் ஒரு திருக்குறள் 04-10-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Oct 3, 2024, 8:35:11 PM

குறள் 244:

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை.

மு.வரதராசன் விளக்கம்:

தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

சாலமன் பாப்பையா விளக்கம்:

நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.

கலைஞர் விளக்கம்:

எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.

English Couplet 244:

Who for undying souls of men provides with gracious zeal,

In his own soul the dreaded guilt of sin shall never feel.

Couplet Explanation:

(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures).

Transliteration(Tamil to English):

mannuyir Ompi aruLaaLvaarkku illenpa

thannuyir anjum vina

VIDEOS

Recommended