- முகப்பு
- தினம் ஒரு திருக்குறள்
- தினம் ஒரு திருக்குறள் 04-10-2024
தினம் ஒரு திருக்குறள் 04-10-2024
தினம் ஒரு திருக்குறள்
UPDATED: Oct 3, 2024, 8:35:11 PM
குறள் 244:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
மு.வரதராசன் விளக்கம்:
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
சாலமன் பாப்பையா விளக்கம்:
நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.
கலைஞர் விளக்கம்:
எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.
English Couplet 244:
Who for undying souls of men provides with gracious zeal,
In his own soul the dreaded guilt of sin shall never feel.
Couplet Explanation:
(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures).
Transliteration(Tamil to English):
mannuyir Ompi aruLaaLvaarkku illenpa
thannuyir anjum vina