தினம் ஒரு திருக்குறள் 31-05-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: May 30, 2024, 6:58:08 PM

குறள் 156:

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்.

மு.வரதராசன் விளக்கம்:

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

சாலமன் பாப்பையா விளக்கம்:

தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.

கலைஞர் விளக்கம்:

தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

English Couplet 156:

Who wreak their wrath have pleasure for a day;

Who bear have praise till earth shall pass away.

Couplet Explanation:

The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.

Transliteration(Tamil to English):

oRuththaarkku orunhaaLai inbam poRuththaarkkup

pondrunh thuNaiyum pukazh

VIDEOS

Recommended